
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Group 1: பாடத்திட்டம் 2022
August 16, 2022TNPSC குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றிய விளக்கங்கள்:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) பணிகள் அடங்கிய
பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமானம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 22.08.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் |
தேர்வின் பெயர் | TNPSC |
வலைத்தளம் | www.tnpsc.gov.in |
நிறுவப்பட்டது | 1929 |
தலைமையகம் | சென்னை |
நோக்கம் | தமிழ்நாடு அரசுப் பணிக்கு தேர்வு செய்தல் |
வேலைவாய்ப்பு பகுதி | தமிழ்நாடு |
முகவரி | தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் TNPSC சாலை, V.O.C.Nagar, பார்க் டவுன், சென்னை-600003, தமிழ்நாடு. |
விண்ணப்பதாரர்கள் இந்த நேரடி நியமனம் செய்வதற்கான இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல் / வழிமுறைகள்/ வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வாணையத்தின் “விண்ணப்பதார்களுக்கான அறிவுரைகள்” ஆகியவற்றை நன்கு படித்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதிக்கு முன் (ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின்) தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு முறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
அறிவிப்பு நாள் | 21.07.2022 |
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் | 22.08.2022 |
இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் | 27.08.2022 – 12.01 மு.ப. முதல் |
29.08.2022 – 11.59 பி.ப. வரை | |
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | 30.10.2022 முற்பகல் 9.30 மணி முதல் |
பிற்பகல் 12.30 மணி வரை | |
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும். |
குறிப்பு:
நிரந்தரப் பதிவுக் கட்டணம் (One Time Registration) ரூ.150?-
குறிப்பு:
நிரந்தரப் பதிவில் பதிவு செய்த நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முடிவுறாத விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கான நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.
முதனிலைத் தேர்வுக்கு, கட்டண சலுகை பெற தகுதியுடையவர்கள்
தவிர ஏனையோர், இணையவழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது
கட்டாயமாக தேர்வுக்கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும்.
கட்டண விலக்கு கோரப்படாத விண்ணப்பதாரர்கள் இந்த நியமனத்திற்கான
முதனிலைத் தேர்வுக்கு கட்டணமாக ரூ.100/- செலுத்தியது போல் முதனிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்.
வகை | சலுகை |
---|---|
(i) ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) |
கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(ii) பழங்குடியினர் | கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(iii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர் |
மூன்று முறை மற்றும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(iv) இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் |
மூன்று முறை மற்றும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(v) முன்னாள் இராணுவத்தினர் | இரண்டு முறை மற்றும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(vi) நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதத்திற்கு குறைவில்லாதவர்கள்) | கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(vii) ஆதரவற்ற விதவைகள் (ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வருவாய் கோட்ட அலுவலர்/ மாவட்ட சார் ஆட்சியர் / மாவட்ட உதவி ஆட்சியர் இவர்களிடம் பெற்றிருக்க வேண்டும்) |
கட்டணம் செலுத்தத் தேவையில்லை |
(i) விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி வரை தங்களது இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
(ii) விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கவனக் குறைவு காரணமாக தவறுகள், பிழைகள் மற்றும் தவறான தகவல்கள் அளித்திருந்தால் விண்ணப்பம் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம் முடிந்த பிறகு எந்த ஒரு தகவலையும் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இது தொடர்பான எந்த ஒரு கோரிக்கைகளும் கவனிக்கப்படமாட்டாது.
தோல்வியடைந்தாலோ அல்லது வங்கிகளால் ஒத்திசைவு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அதற்கு தேர்வாணையம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.
TNPSC குரூப் தேர்விற்கு தயாராவதற்கு தேவையான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடத்திட்டங்களும் Embibe தளம் மற்றும் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன.
EMBIBE WEBSITE: https://www.embibe.com/
EMBIBE APP Play Store Download Link இலவசமாக அணுகி உங்கள் கற்றலை மேம்படுத்தி தேர்வில் வெற்றி பெற்றிடுங்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- Group I தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறைப் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தினை பார்வையிடவும்.